Friday, 7 February 2014

கிளிக்கூடு



 [இந்த பதிவுகள் யாவும் தாரிணி பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் பற்றியே விளக்கம் தரும். நூல்களில் சில மட்டுமே கைவசமுண்டு. வேண்டினால் உடனே அஞ்சலில் கூரியரில் மற்றும் விமான அஞ்சலில் அனுப்பித்தரலாம்.உரிய விலை மற்றும் அனுப்பும் செலவை ஏற்று மணி ஆர்டர் செய்ய வேண்டும் ]
முகவரி 
Dharini Pathippagam, 4A, Ramea Flats, 32/79, Gandhi Nagar 4th Main Road, Adyar, Chennai-600020. Phone no.044-24400135, Mobile: 9940120341 email: vaiyavan.mspm@gmail.com
நாட்டியக்கலைக்கு அர்ப்பணம் ஆன ஒருவனைக் காதலும் காமமும் மாறி மாறித்துரத்திய கதை.  மனதை உயர்த்தும் நாவல்
300 பக்கங்கள் 200 ரூபாய் ....  கிளிக்கூடு
:நாவல்

.....அவள் விழிகள் சிவந்திருந்தன. மைக்கருமையில் அந்தச் சிவப்பு பளிச்சென்று தெரிந்தது
"உன்கண்ணு ரொம்பச் சிவந்திருக்கு"
"போதை தெளியலே"
சங்கர் காபியை சாசரில்ஊற்றாமலேயே பருகத்தொடங்கினான்
ஒரு வாய் குடித்துவிட்டு " இனிமே விஸ்கி குடிக்காதே" என்றான்..
"எப்பவும் நான் இப்படிக் குடிச்சதே இல்லே.நேத்திக்கு தான். உன்னோட தான்."
"நான் அந்த போதையைச் சொல்லலே"
அவன் நிமிர்ந்து பார்த்தான்.
அவள் துணிச்சலானவள் . வெளிப்படையானவள். இது பெண்களுக்குப் பொருந்தாது. எனினும் இவளுக்குப் பொருந்துகிறது. தனக்கே உரிய தனி அழகில்.
அவன் அரை கப்போடு நிறுத்திக்கொண்டு அவளிடம் நீட்டினான். அவள் ஒரு வாய் பருகிவிட்டுத் திருப்பிக் கொடுத்தாள்
அவன் வாங்கிக்கொண்டான்.
"ஒனக்கு அது பிடிக்கலேண்ணா எடுத்துடு" என்று அவளே முன்வந்து அந்த பிராவை அவன் சூட்கேசில் இருந்து எடுக்கப் போனாள்.
அவன் ரேணுவின் கைபிடித்துத் தடுத்தான்
தங்க வளையல்கள் அதிர்ந்தன.
"இருக்கட்டும்"
"ஒனக்குத்தான் நினைவுப் பரிசுகள்ளே நம்பிக்கை இல்லையே"
"குழந்தையான நினைவு நல்லது"
அவள் உதட்டில் நாணம் ஊர்ந்தது
சங்கர் அவளைக் குறுகுறுவென்று பார்த்தான்
ரேணு அவன் மூக்கைத் திருகி வலமும் இடமும் ஆட்டினாள்.  

No comments:

Post a Comment